ஆஸ்திரேலிய காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பாண்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன்,யுவராஜ் சிங், பிரட் லீ உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். பாண்டிங் அணியின் பயிற்சியாளராக சச்சின் செயல்பட உள்ளார். இந்தப் போட்டிக்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.