மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த ஆந்திர வீராங்கனை ஸ்ரீசரணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்ரீசரணியும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும், சந்திரபாபு நாயுடுவை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஸ்ரீசரணிக்கு இரண்டரை கோடி ரூபாய் ரொக்கப் பரிசு, ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை, குரூப் -1 நிலையில் அரசு வேலை ஆகியவற்றை அறிவித்த முதல்வர் சந்திபாபு நாயுடு, இது, இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்