விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு திடீர் நெருக்கடி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி.

தந்தி டிவி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி..

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசின் ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல் எப்படி இந்தியா என பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தவிர பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அடையாளமாக விளங்கிய நட்சத்திர சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், அணி வீர‌ர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் தனது மனுவில் கீதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி ஏழாம் தேதிக்குள் பதில் அளித்திடுமாறு மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"