விளையாட்டு

2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - கங்குலி

சர்வதேச டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்

தந்தி டிவி

நடப்பு ஆண்டில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் எந்த நாட்டில் அந்தத் தொடர் நடத்தப்படும் என ஐசிசி அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து என மொத்தம் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இது மிகவும் பெருமையான ஒன்று என சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டை விரும்பும் நமது நாட்டில் விளையாடுவதால் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்