அரசியல்

பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தல் மீது கற்கள் வீச்சால் பரபரப்பு

புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தலில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தலில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாவிரத பந்தலின் மீது மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவினரும் கற்கள் மற்றும் தடியை அவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்