அரசியல்

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தமது தாயாருடன் செல்ல விரும்புவதாக இளமதி கூறியதால் போலீசார் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தைரியம் இருந்தால் இளமதியை தனியாக ஊடகத்தை சந்திக்க அனுப்புமாறு கூறியுள்ளார். அவ்வாறு செய்தால், உங்கள் முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் என்றும், அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு