அரசியல்

7 பேர் விடுதலையில் தாமதம் செய்தால் ஆளுநரை எங்கும் நுழைய விடமாட்டோம் - வைகோ

7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இந்த போராட்டம் நடந்தது. ஆளுநர் பன்வாரிலாலைக் கண்டித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்