#westbengalelection2026 #bjpvstmc மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் - பல்வேறு இடங்களில் வெடித்த வன்முறை மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் போது, முர்ஷிதாபாத், லாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் குண்டு வீச்சு, கல்லெறிதல், எம்எல்ஏ கார் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் பதிவாகின. இதனால் அப்பகுதியில் இருந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியது. சில இடங்களில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறிருக்க, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், இம்முறை வன்முறை சம்பவங்கள் சில பகுதிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.