குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் குட்கா விற்பனைக்கு, லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொத்தம் 6 மணி நேரம் விசாரணை நீடித்தது. எனவே, குட்கா வழக்கு மீண்டும் சூடி பிடித்துள்ளது.