டெல்லி வன்முறை தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பின. இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து, இது நாடாளுமன்றம் என்றும் சந்தை அல்ல என்றும் தெரிவித்தார்.