கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
இந்திய அரசு இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஆதரவு கரம் நீட்டக்கூடிய கட்டாய சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.