நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் ஆட்சி நடத்தினால் ஆட்சி நீடிக்காது என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருச்செந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியரசு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சாதி வெறியர்களைத் தடுப்பதற்கு புலனாய்வுத் துறையை அரசு உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.