அரசியல்

"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.

தந்தி டிவி

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, நடவடிக்கை இது என்றும், இதற்கு அ.தி.மு.க. அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதாகவும் வைகோ குற்றம்சாட்டி உள்ளார். வீண் பிடிவாதம் பிடிக்காமல், மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த கமத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்