அரசியல்

விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றபின் , முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களும் கிடைத்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அமைச்சரவையின் முதல் முடிவாக ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கரே கூறினார். ராய்காட் நகரம் மராட்டிய மன்னர் சிவாஜியின் தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை