தவெக தலைவர் விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் மாநகர ஆதி திராவிடர் நல குழு சார்பில் இளைஞர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அன்பில் மகேஷிடம், விஜய் ஈரோட்டில் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளதாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.