சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தை, திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், கட்சியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு பதவிகள் வழங்குவதாகவும், பேனரில் ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.