திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டங்களை முன்வைத்தே தேர்தலின் போது அதிமுக செயல்படும் என கூறினார்.