தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.