தி.மு.க.வின் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிபந்தனை விதித்தால் பின்பற்ற தயாராக இருப்பதாக திமுக தெரிவிப்பதை பரிசீலிக்க வேண்டும் எனவும், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.