அதிமுக வாக்குகளில் 70 சதவீதம் சசிகலாவுக்கு கிடைக்கும் என அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பள்ளிப்பட்டு நரசிம்மன் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சசிகலா ஆதரவு நிர்வாகியுமான நரசிம்மன் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்ப்புள்ள கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்..