பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நன்றி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளின் போது மீனவர்களை துரிதமாக மீட்க, ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.