முதலமைச்சர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதில், தமிழகத்தின் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அது தொடர்பாகவும் பேசியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.