அரசியல்

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

தந்தி டிவி

* சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால், சட்டமன்ற விதி 288, 289-ன் கீழ், அதற்கான காரணம், என்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன, அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களை, சபாநாயகரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* அதன் அடிப்படையில் கருணாஸ் கைது தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நாளை சபாநாயகர் தனபாலிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

* பின்னர் சபாநாயகரின் ஒப்புதலை பெற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கருணாஸ் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

* சட்டப்பேரவை கூடியிருக்கும் வேளையில் கைது நடந்தால், சட்டப்பேரவையிலே தெரிவிக்கப்படும் என்றும், சட்டப்பேரவை கூடாத நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தபால் மூலமாகவோ, செய்திக் குறிப்பு மூலமாகவோ தெரிவிக்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்