அரசியல்

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

தந்தி டிவி

* சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால், சட்டமன்ற விதி 288, 289-ன் கீழ், அதற்கான காரணம், என்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன, அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களை, சபாநாயகரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* அதன் அடிப்படையில் கருணாஸ் கைது தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நாளை சபாநாயகர் தனபாலிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

* பின்னர் சபாநாயகரின் ஒப்புதலை பெற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கருணாஸ் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

* சட்டப்பேரவை கூடியிருக்கும் வேளையில் கைது நடந்தால், சட்டப்பேரவையிலே தெரிவிக்கப்படும் என்றும், சட்டப்பேரவை கூடாத நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தபால் மூலமாகவோ, செய்திக் குறிப்பு மூலமாகவோ தெரிவிக்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை