அரசியல்

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

தந்தி டிவி
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு வரும் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீ காளஹஸ்தியில் சந்திர பாபு நாயுடு வாக்கு சேகரித்தார். அப்போது, ஆந்திர மாநில தலைநகர் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக, விமர்சித்தார். மேலும், திருப்பதியின் புனிதத்தை காப்பாற்ற தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்