தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மீட்டெடுத்த அ.தி.மு.க அரசின் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மயிலாடுதுறை செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.