திருவண்ணாமலை மாவட்டம் சோமந்தபுத்தூர் அருகே, மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 283 சில்வர் பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மினி சரக்கு வேன் முழுவதும் சில்வர் குடங்கள் உள்ளிட்ட பாத்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பாத்திரக் கடைக்குக் கொண்டு செல்வதாக வாகனத்தில் வந்தவர் கூறினாலும், தேர்தல் நேரத்தில் ஒரே அளவிலான இவ்வளவு குடங்கள் கொண்டு செல்லப்பட்டது அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குடங்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.