அரசியல்

"எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி" - சரவணன், திமுக

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

நேற்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் பின்னர் தெரிவித்தது.

இந்த நிலையில் மனு தாரர்கள் இந்த வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும், தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை ஏற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?