அரசியல்

X தளத்தில் அறிக்கை விட்ட புஸ்ஸி ஆனந்த்..! அடுத்த நொடியே பரபரப்பில் தவெக தொண்டர்கள் | TVK

தந்தி டிவி
• தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தம் குறித்து, பொதுமக்கள் மத்தியில், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16, 17 மற்றும் 23, 24-ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். அதில், • வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி,முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இம்முகாம் தொடர்பாக, த.வெ.க நிர்வாகிள்,ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன், பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து, இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை