அரசியல்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிப்பு - திருமாவளவன்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய திருமாவளவன், நடைபெற உள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது, நாட்டுக்கு பெரும் தீங்கு செய்துவரும் மோடியை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் தேர்தல் என்றார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே மத்திய பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து உருவாக்கப்பட்டது தி.மு.க. கூட்டணி, ஆனால், அ.தி.மு.க. கூட்டணி பேரத்தால் அமைந்த கொள்கை இல்லாத கூட்டணி என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி