அரசியல்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிப்பு - திருமாவளவன்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய திருமாவளவன், நடைபெற உள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது, நாட்டுக்கு பெரும் தீங்கு செய்துவரும் மோடியை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் தேர்தல் என்றார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே மத்திய பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து உருவாக்கப்பட்டது தி.மு.க. கூட்டணி, ஆனால், அ.தி.மு.க. கூட்டணி பேரத்தால் அமைந்த கொள்கை இல்லாத கூட்டணி என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை