உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதாக நிர்வாகிகளுக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அடுத்து வரவுள்ள உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தகுதிக்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்படும் திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பகுதி, நகர, ஒன்றிய செயலாளர்கள், போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்தவர்களுடன் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய முதல்வர், தனி நபரை விடக் கழகமே பெரிது என்பதை உணர்ந்து அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.