#Trichy | #DMKProtest | #KartavyaDwar | #ThanthiTV Trichy | DMK Protest | பரபரப்பை கிளப்பிய `கர்தவ்ய த்வார்' - கருப்பு மையை கையில் எடுத்த திமுகவினர்.. திருச்சியில் போராட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இந்தி பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக நுழைவுவாயிலில் கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தை தமிழ் எழுத்துக்களுடன் இடம்பெற்றதை கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவருக்கும் புரியும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுகவினர் எச்சரித்தனர்.