அரசியல்

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்

தந்தி டிவி

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்.

சென்னைக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சம்பவம், உருக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி அருள்ராஜ்-கீதா... சென்னை சாலைகளில் பாடல் பாடியும், ஊதுபத்தி விற்றும் பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மெரினாவிற்கு வந்த முதலமைச்சரின் கார் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக காவலர்களிடம் கூறி உள்ளனர். முதலமைச்சர் அந்த வழியாக சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, கார் சத்தத்தை கேட்டு பூரிப்படைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்