நேற்று மாலை பிரதமர் மோடி மற்றும் 71 அமைச்சர்களுக்கு
குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமராக பதவியேற்று 24 மணி நேரம் ஆன நிலையில்,
அமைச்சர்களுக்கான துறைகளை பிரதமர் இன்னும்
ஒதுக்கீடு செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச்
செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு
இட்டுள்ளார். துறைகளை ஒதுக்கீடு செய்வதில்
பிரதமருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.