``என் மகன் நாடாளுமன்றம் செல்வான் ''
ENGLISH என்ற பாயிண்ட்டோடு சொன்ன அமைச்சர் துரைமுருகன்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் தான் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமெனவும், அந்த வகையில் தங்கள் வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதியானவர் தான் எனவும் கூறினார்.