அரசியல்

பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சருக்கு தெரியாமல் அந்த பணிகள் நடந்துள்ளதா? என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

புதிய பாட புத்தகங்களில், கி.மு.,-கி.பி., என்பதற்கு பதில், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் இன்பதுரை, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கி.மு. , கி.பி. என்றே தொடரும் என பதிலளித்தார்.

இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் கி.மு.,-கி.பி., என இடம்பெறும் என கூறுவதை பார்த்தால், அவருக்கு தெரியாமல் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டதா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்