தென்காசி சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன், கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் திறந்த வெளி ஜிப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அய்யாபுரம், குத்துக்கல்வலசை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற அவருக்கு, பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது பேசிய திமுக வேட்பாளர் கலை கதிரவன், தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார். மேலும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தனக்கு வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைக்குமாறு கலை கதிரவன் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.