அரசியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி கடைமடை பகுதி வரை, தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தினமும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என அறிக்கை யொன்றில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதைபார்க்கும் போது, அதிமுக அரசு நீர் மேலாண்மையில் எப்போதும் எவராலும் மன்னிக்க முடியாத படுதோல்வியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே, கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்