அரசியல்

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எப்போதும் மக்களின் நினைவில் இருப்பார் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதேபோல, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் தாமோதரன், த.மா.கா மூத்த தலைவர் ஞானதேசிகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய வாஜ்பாய் அவர்கள் என்றும் நமது நினைவில் இருப்பார் என்று குறிப்பிட்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு