அரசியல்

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எப்போதும் மக்களின் நினைவில் இருப்பார் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதேபோல, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் தாமோதரன், த.மா.கா மூத்த தலைவர் ஞானதேசிகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய வாஜ்பாய் அவர்கள் என்றும் நமது நினைவில் இருப்பார் என்று குறிப்பிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி