அரசியல்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தந்தி டிவி
பள்ளிக்கல்வித்துறையில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆயிரத்து 350 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரத்து 80 ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகளும், தகுதியில்லாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகள் குறித்தும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சருடன் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, அதன் பணிகளை டி.என்.பி.எஸ்.சி.-கே வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு