சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது தலைவரின் பெயருடன் தனது பெயரையும் குறிப்பிடுவதாக தெரிவித்தார். வேறு கட்சியில் இதுபோல் பெயர் குறிப்பிடப்பட்டால் மறுநாளே அந்தப் பதவி இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், தலைவரை முதன்முதலில் பார்த்த பதற்றம் இன்றும் தன்னிடம் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.