அரசியல்

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 2வது வாரத்திற்கு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு