அரசியல்

வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத் தொடர் வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால், வாக்காளர்களை கவரும் வகையில், வருமான வரி சலுகை, பயிர்க் கடன் தள்ளுபடி மற்று​ம் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்