அரசியல்

வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத் தொடர் வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால், வாக்காளர்களை கவரும் வகையில், வருமான வரி சலுகை, பயிர்க் கடன் தள்ளுபடி மற்று​ம் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்