அரசியல்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதோடு, 200 கோடி ரூபாயாக இருக்கும் உற்பத்தி மானியத்தை வரும் ஆண்டில், 500 கோடி ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்றும், த.மா.கா. சார்பில் வலியுறுத்துவதாக, வாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு