அரசியல்

பஹல்காமில் திடீர் நிறுத்தம்

தந்தி டிவி

தொடர் மழை - அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய யாத்ரிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தொடர் மழை காரணமாக, பஹல்காம் Pahalgam மற்றும் பால்டால் Baltal முகாம்களில் இருந்து அமர்நாத்துக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பஞ்ச்தர்னி முகாமில் தங்கியிருந்த யாத்ரிகர்கள் பால்டாலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், வானிலை நிலையைப் பொறுத்து யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும் என்றும், காஷ்மீர் மண்டல ஆணையர் விஜய் குமார் பிதுரி தெரிவித்தார்.

இந்நிலையில், 2 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான யாத்ரிகர்கள் அமர்நாத் குகை ஆலயத்தில் இதுவரை வழிபாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா