அரசியல்

பிரக்யா தாகூர் எம்.பி.,க்கு மாணவர்கள் எதிர்ப்பு - மாகன்லால் சதுர்வேதி பல்கலைக் கழகத்தில் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளை சந்திக்கச் சென்ற பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூருக்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளை சந்திக்கச் சென்ற பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூருக்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மாகன்லால் சதுர்வேதி ஊடகவியல் தேசிய பல்கலைக்கழகத்தில் வருகைப் பதிவு தொடர்பாக இரண்டு மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்திப்பதற்காக பிரக்யா சிங் தாகூர் சென்றபோது அங்கிருந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை ஒரு பெண் எம்.பி. என்றும் பாராமல் அவமரியாதை செய்ததாகவும் கோஷமிட்ட அனைவரும் தீவிரவாதிகள் என்றும் கூறினார். தனக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பிரக்யா தாகூர் கூறினார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் விமானத்தில் இருக்கை தொடர்பாக பயணியுடன் பிரக்யா தாகூர் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்