அரசியல்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டது? - ஸ்டாலின் கேள்வி

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்முனைவோர் எல்லாம், தொழில் துவங்க அண்டை மாநிலம் நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டில் குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு எப்படி கிடைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்