இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குநரை உடனடியாக இட மாற்றம் செய்து விட்டு, நேர்மையான ஐஜி ஒருவரை இணை இயக்குநராக நியமித்து, ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு துறையில், ஆமை வேகத்தில் கூட நகர முடியாமல் தேங்கி கிடப்பது அதிர்ச்சி அளிப்பதாக அறிக்கையில், மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.