அரசியல்

இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை

தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என தமிழிசை வலியுறுத்தினார்

தந்தி டிவி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் அமைப்பு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை வழங்க உள்ளது. இதற்காக அமெரிக்கா புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மருத்துவம், சமூகம், சவாலான சூழ்நிலையில் பணியாற்றும் தலைவர் என்ற அடிப்படையில், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், எந்தவிதத்திலும் தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது எனவும் தமிழிசை தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்