அரசியல்

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

ஜி.எஸ்.டி., நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள், பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய சோனியாகாந்தி, தேசிய கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்புகள் உண்மையில் ஒரு பின்னடைவு என்பதால் கவலைப்பட வேண்டும் என்றார். மாணவர்கள் மீது அக்கறையின்றி தேர்வுகள் திணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்