அரசியல்

ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

தந்தி டிவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறியிருந்த நிலையில், இந்த கருத்துக்கு அவரது மகன் ராஜ்சத்யன், ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் என அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையை ராஜ்சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு சென்று, ராஜ்சத்யன் சந்தித்து பேசினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்